
நிலவொளியில் நான் நடந்த தடங்கள்
மோதி விட்டு போகும் பூங்காற்று
எங்கோ கேட்கும் இனிய கீதம் ரம்மியமான இரவு
ரசிக்கதோன்றும் மௌனம் மௌனம் மௌனம்
தனிமை ஒரு மெல்லிய உணர்வு
கவிதை கவிதை கவிதை மயங்கும் நினைவு
ஏதேதோ எதிர்பார்ப்பு
சோகங்கள் நெருக்கும்போதெல்லாம்
இயற்கை கொடுத்த மருந்து தனிமை
துணையாய் வந்த சொந்தங்கள்
இரவும் , நிலவும்தான்
சோகங்கள் சுமையாய் வந்த போதெல்லாம்
சுமைதங்கியாய் என்னை சுமந்த
மௌனமும் தனிமையும் விலகவே முடியாத கட்டுக்கள்
என்றும் உங்களோடு
ஒரு நதியின் தாகம்
No comments:
Post a Comment